குருதிஅழுத்தம்

குருதிஅழுத்தம்(Blood pressure)
Dr. S. Disiyanthi

 

குருதியானது இரத்தக் குழாய்களினூடாகப் பயணிக்கும்போதுஅதன் சுவர்களில் ஏற்படும் அழுத்தமேகுருதிஅழுத்தம் எனப்படும்.
இந்தஅழுத்தமான இதயத் தசைகள் சுருங்கும் போதுஏற்படும் அழுத்தமானது இதயத்தசைகள் விரியும் போதுஏற்படும் அழுத்தத்தைவிடஅதிகமாக இருக்கும். சாதாரணஒருவரில் குருதிஅழுத்தம் இதயதசைகள் சுருங்கும்போது 120 மில்லிமீற்றர் பாதரதஅழுத்த்தமாகவும் இதயதசைகள் விரியும் போது 80 மில்லிமீற்றர் பாதரசஅழுத்தமாகவும் இருக்கும். இதனை120mmH அஅர்பஎனக்குறிப்பிடப்படும். எனினும் இந்தஅளவானதுசற்று கூடுதலாகவோஅல்லதுகுறைவாகவோகாணப்படுமிடத்துஉடனடியாகநோயாளியாககருதமுடியாது. 2 அல்லது 3 தடவைகள் குருதிஅழுத்தமானதுசோதிக்கப்பட்டபின்னரேசாதாரணஒருவரோஅல்லதுநோயாளியோஎன்பதைமுடிவுசெய்யமுடியும். அத்துடன் வயது,பால் என்பவற்றுடன் சற்றுஅதிகரி;த்தோஅல்லதுகுறைந்தோகாணப்படுவதுசாதாரணமாகும். எனவே இவற்றைவைத்தியர் ஒருவராலேயேதீர்மானிக்கமுடியும்.
குருதிஅழுத்தமானதுஉயர்வாக இருப்பதும் தாழ்வாக இருப்பதும் பாதிப்பைஏற்படுத்தும்.
1) உயர் குருதிஅழுத்தம்

(Hypertension) High Blood pressure
இருவகைப்படும்

1. முதன்மையானது(Primary)
2. இரண்டாவது(Secondary)
• முதலாவதுஎனும் போதுவேறுஎதுவிதநோய்நிலைகளும் இல்லாதபோதுகுருதிஅழுத்தமானதுஅதிகரித்தநிலையாகும்.
இதற்கானகாரணங்கள்
• புகை பிடித்தல், மது போன்றபோதைப்பொருட்களைபாவித்தல்.
• வாழ்க்கைப்பழு (Stress)
• உடற்பருமன் அதிகரித்தவர்கள்.
• உணவில் அதிகஉப்புபயன்படுத்துபவர்களில் ஏற்படவாய்ப்புஅதிகம்.
இரண்டாவதுஎனும் போதுவேறுஏதாவதுநோய்நிலைகளைத் தொடர்ந்துகுருதிஅழுத்தமானதுஅதிகரித்தல் என்பதாகும்.
அதாவதுகுருதிக்குழாய் சுவர்களில் கொழுப்புப் படிந்துகுழாய் குறுகலடைதல்,குழாய் சுவரின் மீள்தன்மை இழத்தல் போன்றவற்றால் ஏற்படுகின்றது.
உ-ம் : இருதயநோய்கள் (Coronary Heart disease),சிறுநீரகநோய்கள்,சலரோகம் (Diabetic),அதிகளவுதைரொயிட்,அதிரினல் சுரப்பியில் கட்டிபோன்றன.
உயர் குருதிஅழுத்தமானதுபெரும்பாலானவர்களில் நோய் குறிகுணங்களைவெளிக்காட்டுவதில்லை. கூடுதலாகஅதிகரித்தபின்னர்ஃவேறுநோய்களிற்குமருந்துஎடுப்பதற்காகச் செல்லும் போதுவைத்தியரினால் சோதித்துஅறியப்படுகிறது. எனவே இதனைஅமைதியாகவரும் கொலையாளி (Silent killer) எனக் குறிப்பிடப்படுகிறது.
குணங் குறிகளாக
• தலையிடி
• வியர்த்தல் அதிகமாக இருத்தல்.
• விரைவானநாடித்துடிப்பு.
• விரைவில் மூச்சிரைப்பு
• தலைசுற்றல்
• பார்வைதெளிவின்மை
• கழுத்தின் பின்பகுதியில் (பிடரி) நோ
போன்றவற்றில் ஒன்றோபலவோகாணப்படலாம்.
இவை காணப்படுமிடத்துவைத்தியரைநாடிச்சென்றுஅறிவுரைபெற்றுக்கொள்வதனால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்துவிலகிக்கொள்ளமுடியும். அலட்சியம் செய்வதனால் பாரதூரமானவிளைவுகளை (பாரிசவாதம்) எதிர்நோக்கநேரிடும்.
அறிவுரைகள் :
1. மாதம் ஒருதடவையாவதுவைத்தியஆலோசனைபெறல். கிளினிக்கினைதவறாதுபயன்படுத்தல்.
2. உப்புஉணவினைகுறைத்தல் அல்லதுதவிர்த்தல்.
3. கொழுப்புஅதிகம் உள்ளஉணவுகள்,தேங்காய்பால் பொருட்கள், இறைச்சிவகைகளைத் தவிர்ததல். பால் எடுப்பின் நன்றாககாச்சிஆறவிட்டபின்னர் ஆடை அகற்றிபருகுதல். கோழி இறைச்சியைமட்டும் குறைந்தஅளவில் பயன்படுத்தலாம்.
4. மாப்பண்டங்களைகுறைந்தஅளவில் பயன்படுத்துதல்.
5. நார்ச்சத்துள்ளஉணவுகள்,தானியங்கள்,அவரைக்குடும்பதாவரஉணவுகள் என்பவற்றைஅதிகமாகஉண்ணுதல்.
6. தினமும் இலைக்கறி வகைகள்,மரக்கறிகள்,பழவகைகள்,என்பவற்றைஉதிகஅளவுஉணவில் சேர்த்துக்கொள்ளல்.
7. உடல் நிறையைக் குறைத்தல்.
8. உடற்பயிற்சி.
9. போதியளவுநித்திரைஃதூக்கம் இரவில் ஏற்படுத்துதல்.
10. தியானம்,யோகாசனம் என்பவற்றினால் மனஉளைச்சல்,வாழ்க்கைப்பழுஎன்பனவற்றினைதவிர்த்துக் கொள்ளல்.
11. புகைத்தல், மது போதைஎன்பனவற்றைத்தவிர்த்தல்.
12. வெண்தாமரைப் பூவில் குடிநீர் செய்துபருகுதல்.
13. உள்ளி,வெந்தயம்,வெங்காயம் என்பவற்றைதினமும் சாப்பிட்டாலோஅல்லதுவெறுமையாகவோஉட்கொள்ளல்.
14. கறிவேப்பிலைஅண்ணளவாக 4/5 கூட்டிலைகளைதினமும் சாப்பாட்டில் அல்லதுபச்சையாகதுவையல் செய்துஉட்கொள்ளல்.
15. பசன்புருட் இலையினைதுவையல் அல்லதுவறைசெய்துஉட்கொள்ளல்.
16. சாறணைகீரையினைசாப்பாட்டில் சேர்த்துக்கொள்ளல்.
17. நீற்றுப்பூசனி,வத்தகை,கெக்கரிக்காய் போன்றனவாரத்தில் நான்குதடவைகளேனும் உட்கொள்ளல்.

2) தாழ்வானகுருதிஅழுத்தம் (Hypotension) Low Blood pressure
அதாவதுஉடல் உறுப்புக்களுக்குச் செல்லும் இரத்தத்தின் அளவுகுறைவாக இருத்தல்.
காரணம்
1) இரத்தத்தின் அளவு (Volume) குறைதல்.
உ+ம் : இரத்தப்பெருக்குDehydration
2) இருதயத்தின் பாதிப்புக்கள்
உ+ம் : Heart attract cardiomyopathy
3) நாடிகளின் சுவரின் தன்மை (tension) குறைதல்.
4) மருந்துகளின் தொடர்பாவனைஃதவறானபாவனை
உ+ம் : வைத்தியஆலோசனை இன்றிதொடர்ச்சியாகபயன்படுத்தல். மனஅழுத்தமாத்திரைகள்.
5) கிருமித் தாக்கங்கள்
உ+ம் : சிறுநீரககிருமி
இரத்தத்தில் கிருமி
குணங்குறிகள்
• சோர்வு,தலைச்சுற்று,மயக்கம்,நிலைமாற்றத்தின் போது (இருத்தல்,எழும்புதல்,படுத்தல்) தலைச்சுற்று.
• கண் மயக்கமடைதல்.
• நெஞ்சுபடபடப்பு
• களைப்பு
• தாகம்
என்பவற்றில் ஒன்றோபலவோஏற்படுகிறது. இவ்வாறானநிலையில் வைத்தியஆலோசனையைப் பெற்றுஅதன்படிகைக்கொள்ளவேண்டும்.
அவ்வாறுஇல்லாதவிடத்து இருதயரோகம்,சிறுநீரகம் பாதிப்படைதல் (Kidney failure ),கைகால்கள் செயலிழத்தல்,அதிர்ச்சி (Shock) என்பனஏற்பட்டுபாரியவிளைவுகளைஏற்படுத்தும்.

அறிவுரைகள்
1. நீராகாரங்களைஅதிகளவில் எடுத்தல்;
2. நீர் பருகுதலைஅதிகரித்தல்.
3. உணவில் உப்பின் அளவைஓரளவுஅதிகரித்துஉட்கொள்ளல்.
4. இலைக்கறி வகைகள்,பழவகைகள், சூப் வகைகள்,கஞ்சிவகைகளைபயன்படுத்துதல்.
5. பேரீச்சம்பழத்தினைதினமும் 3அல்லது4உட்கொள்வதுசிறந்தது.
மேற்கூறப்பட்டவற்றைக் கைக்கொள்வதுடன் அவ்வவ் வேளைகளில் வைத்தியஆலோசனையைப் பெற்றுகுருதிஅழுத்தத்தினைசாதாரணநிலையில் பராமரித்துசுகதேகிகளாகவாழ்வோமாக.

நன்றி — அருள் ஒளி